மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் டிரைவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தர்மபுரி மாவட்டத்திலுள்ள எருமியாம்பட்டி பகுதியில் லாரி டிரைவராக கவியரசு என்பவர் வசித்து வந்தார். இவர் மோட்டார் சைக்கிளில் வாசிகவுண்டனூருக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது கும்பார அள்ளி பிரிவு சாலையில் எதிரே வந்த கார் கவியரசு மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதனால் கவியரசு பலத்த காயமடைந்தார்.
இதனையடுத்து அக்கம்பக்கத்தினர் கவியரசை மீட்டு பாப்பிரெட்டிப்பட்டி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.அதன்பின் கவியரசு மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி கவியரசு பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர.