மொரிசியஸ் அருகே கடலில் கலந்த எண்ணெயை அகற்றுவதற்கு உதவியாக 30 டன் கருவிகளை இந்திய அனுப்பியுள்ளது.
ஜப்பானை சேர்ந்த எண்ணெய் கப்பல் ஒன்று கடந்த மாதம் மொரீசியஸ் கடற்பகுதியில் பவளப்பாறையில் மோதி உடைந்தது. அதனால் கப்பலில் இருந்த எண்ணெய் முழுவதும் கடலில் கொட்டி பரவியது. அதனால் மொரிசியஸ் கடற்பகுதி முழுவதுமாக பெரும் மோசமடைந்துள்ளது. அதன் பின்னர் கடந்த வாரம் சுற்றுச்சூழல் அவசர நிலையை பிறப்பித்த பிரதமர் பிரவிந்த் ஜெகநாத், கடலில் கலந்த எண்ணையை அகற்றுவதற்கு உலகநாடுகள் உதவுமாறு வேண்டுகோள் விடுத்திருந்தார்.
இதனைத் தொடர்ந்து கடலில் கொட்டிய எண்ணெயை அகற்றுவதற்கு 30 டன் தொழில்நுட்ப கருவிகளை விமானப்படை விமானம் மூலமாக இந்தியா அனுப்பி வைத்திருக்கிறது. அது மட்டுமன்றி இந்திய கடலோர காவல் படையை சேர்ந்த சிறப்பு அதிகாரிகள் 10 பேர், அப்பகுதியில் நிறுத்தப்பட்டுள்ளனர். மனிதாபிமான அடிப்படையிலும் இந்திய பெருங்கடல் பிராந்தியத்தில் இருக்கின்ற அண்டை நாடுகளுக்கு பேரிடரில் உதவுவது மற்றும் இந்த பிராந்தியத்தின் பாதுகாப்பு மற்றும் வளர்ச்சியில் பிரதமர் மோடி கொண்டிருக்கும் தொலைநோக்கு பார்வையில் அடிப்படையில் இந்த உதவி அனுப்பப்பட்டு இருப்பதாக வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.