Categories
உலக செய்திகள்

சூறாவளி வேகத்தில் வீசிய காற்று…. 1000-க்கும் மேற்பட்ட வீடுகள் நாசம்…. அமெரிக்காவை உலுக்கிய சம்பவம்….!!!!

அமெரிக்காவில் பயங்கர காட்டுத் தீயால் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகள் தீயில் எரிந்து நாசமாகியுள்ளது.

அமெரிக்காவில் உள்ள கொலராடோ மாகாணத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகள் காட்டு தீயால் எரிந்து நாசமாகியுள்ளது. இந்த நிலையில் உள்ளூர் ஊடகங்கள், கடந்த 30-ஆம் தேதி மணிக்கு 105 மைல் கிலோமீட்டர் என்ற வேகத்தில் பலத்த காற்று வீசியதால் தான் காட்டுத் தீ மோசமாக பரவியதாக தகவல் தெரிவித்துள்ளது.

மேலும் இந்த தீ விபத்தில் காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதேபோல் ஏராளமான வாகனங்கள் மற்றும் வீடுகள் தீயில் எரிந்து நாசமாகியுள்ளது. இதற்கிடையே வீடுகளில் வளர்க்கப்பட்டு வந்த 67 செல்லப்பிராணிகள் மாயமானதாகவும் பகீர் தகவல் வெளியாகியுள்ளது.

Categories

Tech |