Categories
உலக செய்திகள் தேசிய செய்திகள்

200க்கும் மேற்பட்ட ஊழியர்கள் மாயம்… பலி எண்ணிக்கை 32 ஆக உயர்வு… தீவிர தேடுதல் வேட்டையில் மீட்பு படையினர்…!

உத்தரகாண்டில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் இதுவரை 32 பேர் சடலமாக மீட்கப்பட்டுள்ளது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

இமயமலையில் ஏற்பட்ட பனிச்சரிவால் கடந்த ஞாயிற்றுக்கிழமை இந்தியாவின் வட மாநிலமான உத்தரகாண்டில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதில் ரிஷிகங்கா ஆற்றுப் பகுதியில் இயங்கி வரும் ஒரு நீர்மின் நிலையம் மற்றும் புதிதாக கட்டப்பட்டு வரும் தபோவன் நீர்மின் நிலையம் முற்றிலும் சேதமடைந்தது.

இதில் பணியாற்றிக் கொண்டிருந்த 200க்கும் மேற்பட்ட ஊழியர்கள் வெள்ளத்தால் அடித்துச் செல்லப்பட்டனர். இதில் 20 பேர் அதிர்ஷ்டவசமாக பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். ஆனால் கடந்த 3 நாட்களில் 32 பேர் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். மேலும் 170 பேருக்கு மேற்பட்டோர் இன் நிலைமை என்னவென்று இதுவரை தெரியவில்லை. இதனால் உயிரிழப்பின் எண்ணிக்கையில் அதிகம் ஆகலாம் என்று அஞ்சப்படுகிறது.

இதேபோல், வெள்ளத்தால் அடித்து வரப்பட்ட குப்பைகள் மற்றும் மணல்கள் தபோவன் பகுதியில் சுமார் 2 கிலோமீட்டர் நீளமுள்ள ஒரு சுரங்கப் பாதையை மூடியது. இதனால் சுரங்கத்துக்குள் பணியாற்றிய 35 பேர் மூன்று நாட்களாக உள்ளேயே சிக்கி தவிக்கின்றனர். அவர்களை மீட்கும் முயற்சியில் தேசிய பேரிடர் மீட்புக் குழு மற்றும் ராணுவ வீரர்கள் தீவிரமாகப் போராடி வருகின்றனர்.

சுரங்கத்தில் ஏற்பட்ட அடைப்பை கிரேன்கள் மூலம் சீர் செய்து வருகின்றனர். மேலும் அவர்கள் எந்த பகுதியில் சிக்கியுள்ளார்கள் என்பதை கண்டறிய தெர்மல் கேமராக்கள் பொருத்தப்பட்ட டிரோன்கள் அனுப்பி தீவிர தேடுதலில் ஈடுபட்டு வருகின்றனர்.

Categories

Tech |