அரசு பேருந்தில் சென்ற மூதாட்டியிடம் நகையை திருடிச் சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.
திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள டோனாவூர் செட்டிநாடு பகுதியில் தளவாய் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கோமதி என்ற மனைவி உள்ளார். இவர் அரசு பேருந்து ஒன்றில் களக்காட்டிற்கு சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் தளவாய் களக்காடு பேருந்து நிலையத்திற்கு வந்து கீழே இறங்கியபோது அவர் கழுத்தில் கிடந்த 4 பவுன் தங்க சங்கிலி காணாமல் போனதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.
இந்நிலையில் கூட்ட நெரிசலில் மர்மநபர் யாரோ நகையை திருடிச் சென்றது தெரியவந்துள்ளது. இதுகுறித்து கோமதி அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நகையை திருடி சென்ற மர்மநபர் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.