Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

“ஐயோ என்னோட குழந்தை போச்சே”… குரங்குகளின் அட்டகாசம்… பறிபோன குழந்தையின் உயிர்…!!

குரங்குகளால் தூக்கிச் செல்லப்பட்ட குழந்தையை அகழியில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தஞ்சை மாவட்டத்தில் உள்ள மேலரங்கம் பகுதியில் வீடுகளின் முன்புறத்தில் ராஜராஜ சோழன் காலத்தில் கட்டப்பட்ட அகலி ஒன்று இருக்கிறது. இப்பகுதியில் குரங்குகள் அதிகம் பெருகி வருவதால் வீடுகளில் புகுந்து வீட்டில் உள்ள பொருட்களை தூக்கி சென்று விடுவதாகவும் புகார்கள் அதிக அளவில் உள்ளது. இந்நிலையில் மேலவீதி கோட்டை பகுதியில் ராஜா என்பவர் பெயிண்டர் தொழில் செய்து வருகிறார்.

இவருடைய மனைவி புவனேஸ்வரிக்கு கடந்த ஏழு நாட்களுக்கு முன்பு இரண்டு பெண் குழந்தைகளை பிறந்துள்ளது. பிறந்த குழந்தைகளுடன் அனைவரும் வீட்டில் தூங்கிக் கொண்டிருக்கும்போது திடீரென்று உள்ளே புகுந்த குரங்குகள் இரண்டு குழந்தைகளையும் தூக்கி சென்று உள்ளது. இதனால் பதறிப்போன பெற்றோர் குரங்குகளை பின்தொடர்ந்து ஓடி சென்றுள்ளனர்.

அதில் ஒரு குழந்தையை குரங்கு வீட்டின் கூரை மீது போட்டு விட்டு சென்றுவிட்டது. மேலும் மற்றொரு குரங்கு குழந்தையுடன் ஓடி விட்டதால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் பல பகுதிகளில் தேடியுள்ளனர். ஆனால் குழந்தை வீட்டின் அருகில் உள்ள அகழியில் சடலமாக மீட்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |