Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

பட்டாசு ஆலை வெடி விபத்து… பிரதமர் மோடி இரங்கல்… 2 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு…!!

பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா 2 லட்சம் மற்றும் காயமடைந்தவர்களுக்கு 50 ஆயிரம் நிவாரணம் வழங்கப்படும் என பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.

விருதுநகர் மாவட்டத்திலுள்ள அச்சங்குளம் கிராமத்தில் மாரியம்மாள் பட்டாசு ஆலை அமைந்துள்ளது. இந்த ஆலையில் திடீரென ஏற்பட்ட வெடி விபத்தில் சிக்கி 12 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்து விட்டனர். மேலும் இந்த விபத்தில் 30க்கும் மேற்பட்டோர் பலத்த காயமடைந்தனர். இது குறித்து பிரதமர் மோடி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து ஏற்பட்டது வருத்தம் அளிக்கிறது என்று கூறியுள்ளார். மேலும் என் எண்ணங்கள் அனைத்தும் துயரம் அடைந்த குடும்பங்களுக்கு ஆதரவாக இருக்கும் என கூறியுள்ளார்.

இதனையடுத்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்கள் விரைவில் குணமடைவார்கள் என்று நம்புவதுடன், அதிகாரிகள் பாதிக்கப்பட்டவர்களுக்காக உதவும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர் எனவும் தெரிவித்துள்ளார். அதோடு இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 2 லட்சம் ரூபாய் மற்றும் படுகாயம் அடைந்தவர்களுக்கு தலா 50,000 ரூபாய் நிவாரணம் அளிக்கப்படும் என பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.

Categories

Tech |