Categories
தேசிய செய்திகள்

ஆதாரில் மொபைல் நம்பர்….. இதை செய்யலைனா சிக்கல் தான்….. UIDAI முக்கிய அறிவிப்பு….!!

ஆதார் அட்டையுடன் செல்போன் நம்பரை இணைப்பது  குறித்த முக்கிய செய்தியை UIDAI அறிவித்துள்ளது.

தனிநபர் அடையாள அட்டையாள அட்டையான ஆதார் அட்டையை அரசின் நலத்திட்ட உதவிகளுக்கும், மற்ற வேலைகளுக்கும் முக்கிய ஆவணமாகவும் கட்டாயமாக்கப்பட்டு வருகிறது. வங்கிக்கணக்கு, பான் கார்டு உள்ளிட்ட தனிநபர் சார்ந்த கணக்குகள் இணைப்புகளும் ஆதார் அட்டை அவசியம் ஆகிறது. குறிப்பாக வரி ஏய்ப்பை தடுக்கவும், கடம்பன் மோசடிகளை குறைப்பதற்கும் பான் கார்டுடன் உங்கள் ஆதாரை கண்டிப்பாக இணைக்க வேண்டும். இதுபோன்ற கட்டுப்பாடுகள் தற்போது வந்துள்ளன. இவ்வாறான தனிநபர் சார்ந்த அனைத்துவிஷயங்களுக்கும் ஆதார் தேவைப்படுகின்றது.

இவ்வளவு முக்கியமான இந்த ஆதார் அட்டையில் முக்கியான விஷயம் என்னவென்றால் மொபைல் எண்ணை ஆதார் அட்டையுடன் இணைக்க வேண்டும். இதுவரை உங்களுடைய மொபைல் எண்ணைப் பதிவு செய்யவில்லை எனில் பல பிரச்சினைகளை சந்திக்க நேரிடலாம். அதாவது செல்போன் எண் பதிவு செய்யப்படாத ஆதார் எண்ணை சரிபார்க்க முடியாது. ஆதார் அட்டையுடன் மொபைல் எண்ணை இணைப்பது மிகவும் ஈஸியான ஒன்று தான். பக்கத்திலுள்ள ஆதார் சேவா கேந்திரா மையங்களில் இணைக்கலாம். இதுகுறித்து UIDAI முக்கிய செய்தி ஒன்று வெளியிட்டுள்ளது. அதில், செல்போன் நம்பரை ஆதரவுடன் இணைக்க எந்த ஒரு ஆவணமும் தேவை கிடையாது என்று கூறியுள்ளது.

ஆதார் சேவை மையங்களுக்கு ஆதார் அட்டை எடுத்துச் சென்று செல்போன் எண்ணை இணைக்கவோ அல்லது அப்டேட் செய்யவோ முடியும். https://appointments.uidai.gov.in/easearch.aspx?AspxAutoDetectCookieSupport=1 என்ற இணையதள முகவரியில் சென்று பக்கத்திலுள்ள ஆதார் மையத்தை நீங்கள் தெரிந்துகொள்ளலாம் என்று தெரிவித்துள்ளது. ஆதார் மையத்துக்குச் செல்வதற்கு முன்பாகவே ஆன்லைன் மூலமாக அப்பாயின்மெண்ட் பெற முடியும். ஆதார் அப்டேட்டுக்குரூ. 50 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.

Categories

Tech |