திருமணமான பெண் மாயமானது குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
சாத்தான்குளத்தில் இருக்கும் முஸ்லிம் மேல தெருவை சேர்ந்தவர் ஹமீத். கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் ஆகி உள்ளது ஷிபானாவிற்கு கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் ஆகி உள்ளது. திருமணம் முடிந்து ஷிபானா கணவருடன் வசித்து வரும் வேலையில் கணவன் மனைவி இடையே குடும்ப தகராறு காரணமாக அடிக்கடி சண்டை ஏற்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து இருவரும் முறையாக பிரிந்து வாழ்ந்து வந்தனர். எனவே ஷிபானா தனது பெற்றோரின் இல்லத்தில் வசித்து வந்தார்.
இந்நிலையில் நேற்று வீட்டில் தூங்கச் சென்ற அவர் காலையில் காணாமல் போயுள்ளார். மகனை காணாமல் பெற்றோர் அதிர்ச்சி அடைந்து அக்கம் பக்கத்திலும் உறவினர்கள் வீடுகளிலும் தேடியுள்ளனர் எங்கு தேடியும் கிடைக்காத காரணத்தினால் ஹமீது சாத்தான்குளம் காவல் நிலையத்தில் மகளை கண்டுபிடித்து தருமாறு புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.