Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

அறுந்து கிடந்த மின்கம்பி…. பெண்ணுக்கு நேர்ந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!!

மின்சாரம் தாக்கி இளம்பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள அறந்தாங்கி பகுதியில் மதியழகன் என்பவர் வசித்து வருகின்றார். இவருக்கு தமிழ்ச்செல்வி என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் தமிழ்ச்செல்வி தனது வீட்டில் வளர்க்கும் கால்நடைகளுக்கு புல் அறுப்பதற்காக அருகிலுள்ள வயல்வெளிக்கு சென்றுள்ளார். ஆனால் நீண்ட நேரமாகியும் தமிழ்ச்செல்வி வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த மதியழகன் அருகில் உள்ள வயல் பகுதியில் சென்று பார்த்துள்ளார்.

அப்போது தமிழ்ச்செல்வி வயலில் அறுந்து கிடந்த மின் கம்பியில் இருந்து மின்சாரம் பாய்ந்து உயிரிழந்து கிடந்ததை பார்த்து மதியழகன் கதறி அழுதுள்ளார். இதனை அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தமிழ்ச்செல்வியின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |