Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

நல்ல வேளை ஒன்னும் ஆகல… சட்டென கவிழ்ந்த மினி லாரி… நீலகிரியில் பரபரப்பு…!!

கட்டுப்பாட்டை இழந்த மினி லாரி பள்ளத்தில் கவிழ்ந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் உள்ள வாளவயல் பகுதியில் சக்தி என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் சக்தி தேயிலை நிரப்பும் சாக்கு பைகளை தனது மினி லாரியில் ஏற்றிக்கொண்டு அட்டி பகுதிக்கு புறப்பட்டுள்ளார்.

இதனை அடுத்து அட்டி பகுதிக்கு அருகே சென்று கொண்டிருந்த போது திடீரென சக்தியின் மினி லாரி கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விட்டது. இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக சக்தி காயமின்றி உயிர் தப்பிவிட்டார். அதன்பின் அருகில் உள்ளவர்கள் இணைந்து கயிறு கட்டி பள்ளத்தில் கவிழ்ந்த மினி லாரியை மீட்டனர்.

Categories

Tech |