அதிகமான அகதிகளின் வருகையால் நியூயார்க் நகரத்தில் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.
அமெரிக்க நாட்டில் நியூயார்க் மாகாணம் அமைந்துள்ளது. இந்த மாகாணத்தில் பிற நாடுகளை சேர்ந்த அகதிகளின் வருகை அதிகரித்துள்ளது. இதனால் ஏற்பட்டுள்ள அசாதாரணமான சூழலை தடுக்கும் பொருட்டு நியூயார்க் மாகாணத்தின் கவர்னர் எரிக் ஆடம்ஸ் அவசர நிலையை பிரகடனம் செய்துள்ளார். இது குறித்து செய்தியாளர்களின் சந்திப்பின்போது அவர் பேசியதாவது “செப்டம்பர் மாதம் முதல் ஒவ்வொரு நாளும் சராசரியாக 5 முதல் 6 பேருந்துகள் நகரத்திற்குள் வந்து கொண்டிருக்கின்றது.
மேலும் நகரத்தின் தங்குமிடம் அமைப்பில் வசிக்கும் ஐந்தில் ஒருவர் தற்போது புகலிடம் தேடி அலைகின்றார். அது மட்டும் இல்லாமல் வருபவர்களில் பலர் பள்ளி குழந்தைகளை கொண்ட குடும்பங்கள் மற்றும் அவசர மருத்துவ உதவி தேவைப்படுகிறவர்களாக இருக்கிறார்கள்” என்று அவர் கூறியுள்ளார்.