Categories
கால் பந்து விளையாட்டு

1இல்ல.. 2இல்ல… 12போட்டி காலி… பிரபல கால்பந்து கேப்டனுக்கு சிக்கல்… அதிர்ந்து போன ரசிகர்கள்…!!

எதிரணி வீரரை தாக்கிய காரணத்திற்காக பார்சிலோனா அணியின் கேப்டன் லியோனல் மெஸ்ஸி அடுத்து நடைபெறவுள்ள 12 போட்டிகளில் இருந்து இடைநீக்கம் செய்ய வாய்ப்பிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

பார்சிலோனா அணியும் – அத்லடிகா பில்பாவோ அணியும்  நேற்று நடைபெற்ற சூப்பர் கோப்பையின் இறுதிப் போட்டியில் மோதியது. இந்த போட்டியில்  பார்சிலோனா அணியை வீழ்த்தி அத்லடிகா பில்பாவோ  அணி 3- 2 என்ற கோல் கணக்கில்  வெற்றி பெற்றது. இப்போட்டியின் கடைசி நிமிடத்தில் பார்சிலோனா அணியின் கேப்டன் லியோனல் மெஸ்ஸி அத்லடிகா பில்பாவோ அணியின் வீரரான ஆசியர் வில்லிபேரவை தாக்கியுள்ளார்.

இதனால்  லியோனல் மெஸ்ஸிக்கு  கால்பந்து போட்டியின் நடுவர் ரெட்கார்ட் வழங்கினார். இந்நிலையில் வீரரிடம்  பந்து இல்லாத சமயத்தில் அவரை தாக்கியதால்  லியோனல் மெஸ்ஸி அடுத்து நடைபெறும் 12 ஆட்டங்களில்  இடைநீக்கம் செய்து ஸ்பானிஸ்  கால்பந்து கூட்டமைப்பு உத்தரவு  பிறப்பிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த தகவல் லியோனல் மெஸ்ஸியின் ரசிகர்களுக்கு பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |