தொண்டை புண் ஆறுவதற்கு எளிய மருத்துவ குறிப்புகள்
தொண்டை வலியானது கிருமிகளின் பாதிப்பினால் தான் உருவாகியது. இதனால் காய்ச்சல் ஏற்படவும் வாய்ப்புகள் உள்ளது. இந்த தாக்கம் உள்ளவர்கள் இருமும் போதும் தும்மும் போதும் காற்று மூலம் நுண்ணுயிர்கள் பரவி மற்றவர்களையும் பாதிக்கும்.
சிறிதளவு மிளகை தட்டி அதில் வெள்ளம் கலந்து உருண்டை பிடித்து சாப்பிட்டு வந்தால் தொண்டைப புண் சரியாகும்.
எலுமிச்சை ஜூஸில் சிறிது துளசி இலையையும் தேனையும் சேர்த்து குடித்தால் தொண்டை புண் குணமாகும்.
மணத்தக்காளி கீரையை நிழலில் உலர்த்தி பொடி செய்து அதில் போட்டு நெய் சேர்த்து சாப்பிட்டால் தொண்டை புண் சரியாகும்.
நன்கு பழுத்த நாவல் பழத்தை உப்பில் தொட்டு சாப்பிட்டால் தொண்டை புண் சரியாகிவிடும்.
கடுக்காய் பொடியை தேனில் குழைத்து சாப்பிட்டால் தொண்டை புண் சரியாகும்.