கொரோனாவுக்கு அமெரிக்கா பரிந்துரைத்த மருந்தை இந்தியாவும் பரிந்துரை செய்துள்ளது.
சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் உலகையே அச்சுறுத்தி வருகிறது. 170 க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ள கொரோனா வைரஸ்சால் 2 லட்சத்து 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். 13 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களில் உயிர்களை பலி வாங்கிய இந்த கொடூர வைரஸை கட்டுப்படுத்த உலகம் முழுவதும் பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது.
மேலும் உலகம் முழுவதும் உள்ள ஆராய்ச்சியாளர்கள், மருத்துவ குழுவினர் இதற்கு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் ஹைட்ராக்சிகுளோரோகுயினை கொரோனாவுக்கு தடுப்பு மருந்தாக கொடுக்கலாம் என்று தெரிவித்திருந்தார்.
The National Task Force COVID19 constituted by ICMR recommends the use of hydroxy-chloroquine for prophylaxis of COVID19 for high-risk cases pic.twitter.com/mhxI55VDc5
— ANI (@ANI) March 23, 2020
அதனைத் தொடர்ந்து இந்திய மருத்துவ கவுன்சிலும் அதே பரிந்துரையை செய்துள்ளது. கொரோனாவால் தீவிரமாக பாதிக்கப்பட்டவர்களுக்கு ஹைட்ராக்சிகுளோரோகுயின் மருந்து தர பரிந்துரைத்தது மத்திய அரசு. இந்திய மருத்துவ கவுன்சில் அமைந்த தேசிய அவசர காலக் குழு தடுப்பு மருந்து குறித்து பரிந்துரை செய்துள்ளது. ஹைட்ராக்சிகுளோரோகுயினை கொரோனாவுக்கு மருந்தாக அமெரிக்கா அறிவித்திருந்தது. மலேரியாவுக்கு தரப்படும் ஹைட்ராக்சிகுளோரோகுயின் மருந்தை கொரோனா சிகிச்சைக்கு தரலாம் என ஐ.சி.எம்.ஆர் தெரிவித்துள்ளது.