Categories
மதுரை மாவட்ட செய்திகள்

எப்படி விழுந்துச்சு தெரியல…. வனத்துறையினரிடம் ஒப்படைப்பு…. தீயணைப்பு வீரர்கள் செயல்….!!

கிணற்றிலிருந்த மயில்களை நீண்ட நேரம் போராடி தீயணைப்பு வீரர்கள் மீட்டு வனத்துறை அதிகாரியிடம் ஒப்படைத்துள்ளனர்.

மதுரை மாவட்டத்தில் உள்ள சிரகம்பட்டி கிராமத்தில் ஆண்டிச்சாமி என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் விவசாயியான இவரின் தோட்டத்தில் இருக்கும் 80 அடி ஆழமுள்ள கிணற்றுக்குள் ஐந்து குஞ்சுகளுடன் மயில் ஓன்று எதிர்பாராமல் தவறி விழுந்துள்ளது. அதன்பின் மயில்கள் கிணற்றில் உயிருக்குப் போராடி கொண்டு இருந்துள்ளது.

இதனைப் பார்த்த ஆண்டிச்சாமி தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். அந்த தகவலின்படி விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் கிணற்றில் இறங்கி தாய்மையுடன் 5 குஞ்சுகளையும் உயிருடன் மீட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து அந்த மயில்களை வனத்துறை அதிகாரியிடம் ஒப்படைத்துள்ளனர்.

Categories

Tech |