மயிலாடுதுறையை தனி மாவட்டமாக தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது
தமிழக சட்டப்பேரவையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடந்த மார்ச் 7 ஆம் தேதி விதி எண் 110-ன் கீழ் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். அந்த அடிப்படையில் மயிலாடுதுறையை தலைநகராகக் கொண்டு ஒரு புதிய மாவட்டம் உருவாக்கப்படும் என்ற ஒரு அறிவிப்பை முதல்வர் அறிவித்தார். நிர்வாக வசதிக்காகவும், மக்களுக்கு அரசின் திட்டங்கள் விரைந்து சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்தோடு மாவட்டத்தை பிரித்ததாக முதல்வர் தெரிவித்த்திருந்தார்.
இந்தநிலையில் நாகப்பட்டினம் மாவட்டத்தில் இருந்து மயிலாடுதுறையை தனி மாவட்டமாக பிரித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. மேலும் மயிலாடுதுறைக்கு மாவட்ட ஆட்சியர் நியமிக்கப்படாததால் கொரோனா தடுப்பு பணிகளை வருவாய் நிர்வாக ஆணையர் ஒருங்கிணைப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் தமிழ்நாட்டின் 38ஆவது மாவட்டமாக மயிலாடுதுறை மாவட்டம் உதயமாகிறது. இதோடு சேர்த்து கடந்த ஒரு வருடத்தில் மட்டும் புதிதாக 6 மாவட்டம் உருவாக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.