Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

திடீரென மாயமான மூதாட்டி…. ஏரியில் பிணமாக மீட்பு…. திருவண்ணாமலையில் பரபரப்பு….!!

மாயமான மூதாட்டி ஏரியில் பிணமாக மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள மேல்சீசமங்கலம் பகுதியில் மேரி என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு மேரி திடீரென வீட்டில் இருந்து மாயமானார். இதனால் மேரியின் மகன் சகாயநாதன் உறவினர் மற்றும் அக்கம் பக்கத்தினர் வீட்டிலும் தேடி வந்துள்ளார். ஆனால் மேரி கிடைக்காததால் சகாயநாதன் ஆரணி தாலுகா காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வந்தனர்.

இந்நிலையில் மேல்சீசமங்கலம் கிராமத்தில் உள்ள ஏரியில் மூதாட்டி ஒருவர் பிணமாக கிடப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் பார்த்த போது இறந்து கிடந்தவர் மாயமான மேரி என தெரியவந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் மேரியின் உடலை உடனடியாக மீட்டு ஆரணி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இது குறித்து காவல்துறையினர் மேரி ஏரியில் தவறி விழுந்து இறந்தாரா? என பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |