மே தின பேரணியில் கலவரம் ஏற்பட்டதால் 90க்கும் மேற்பட்ட போலீசார் படுகாயம் அடைந்துள்ளனர்.
ஜெர்மன் நாட்டில் பெர்லின் நகரில் கடந்த சனிக்கிழமை அன்று 20க்கும் மேற்பட்ட வெவ்வேறு மே தின பேரணிகள் நடைபெற்றுள்ளது. அவற்றில் பெரும்பாலான பேரணிகள் அமைதியாகவே நடைபெற்று முடிந்துள்ளது. ஆனால் Neukoelln மற்றும் Kreuzberg நகரங்களில் 8,000 பேர் கொண்ட இடதுசாரி அணிவகுப்பு நடத்திய பேரணியில் வன்முறை வெடித்துள்ளது. அந்த சமயத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போலீசார் மீது ஆர்ப்பாட்டகாரர்கள் பாட்டில்களையும் கற்களையும் வீசி உள்ளனர்.
மேலும் குப்பைத்தொட்டிகளையும் மரக்கட்டைகளையும் தெருக்களில் போட்டு எரித்துள்ளனர். இந்த வன்முறையில் 90 போலீசார் படுகாயம் அடைந்துள்ளனர். இந்த வன்முறை ஏற்பட்டவுடன் 354 ஆர்ப்பாட்டக்காரர்கள் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இதேபோல் பிரான்ஸ் நாட்டில் தலைநகரான பாரிஸ் மற்றும் லியோன் நகரங்களில் மே தின பேரணிகள் கலவரமாக மாறியுள்ளது. அங்கும் போலீசார் படுகாயமடைந்துள்ளனர். இந்த வன்முறையில் 56 பேர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.