கொரோனா பரவலுக்கு இடையே சென்னையில் டாஸ்மாக் கடைகளை திறக்கும் அரசின் முடிவுக்கு பலரும் கண்டனம் தெரிவித்துயுள்ளனர்.
சென்னையில் நாளை முதல் டாஸ்மாக் மதுபான கடைகள் திறக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழக அரசின் இந்த முடிவை விமர்சித்துள்ள தமிழக பாஜக துணைத் தலைவர் திருமதி. வானதி சீனிவாசன், சாமி கும்பிட தடை விதித்துவிட்டு டாஸ்மாக் கடைகளை மட்டும் திறப்பது நியாயமா என கேள்வி எழுப்பியுள்ளார்.
நடிகை கஸ்தூரி வெளியிட்டுள்ள ட்விட்டரியில் கொரோனா காலத்தில் பள்ளிக்குச் செல்ல வேண்டாம். பணிக்கு செல்ல வேண்டாம். விநாயகர் சதுர்த்திக்கு வெளியே செல்ல வேண்டாம். மதுபான கடைக்கு மட்டும் போகலாம் என அரசின் முடிவை விமர்சித்துள்ளர்.