மிகப்பெரும் சூரிய புயல், பூமியை தாக்கி ஜிபிஎஸ் தொலைபேசி சிக்னல்களை பாதிப்படையச் செய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
விஞ்ஞானிகள், சூரியனிலிருந்து வீசும் புயல் மூலம் பூமியில் இருக்கும் தொலைதொடர்பு சேதமடையலாம் என்று தெரிவித்திருக்கிறார்கள். செவ்வாய்க்கிழமை அல்லது புதன்கிழமையில் பூமியை சூரியப் புயல் தாக்கும். அது பூமியினுடைய காந்த புலத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று நாசாவின் விஞ்ஞானிகள் கூறியிருக்கிறார்கள்.
இந்த சூரிய புயலானது, பூமியினுடைய மேல் வளிமண்டலத்தில் இயங்கக் கூடிய செயற்கை கோள்களையும், ஜிபிஎஸ் சிக்னல்களையும் சேதமடையச்செய்யும். இதனால் உலகில் உள்ள சில இடங்களில் மின் இணைப்புகளும் பாதிக்கப்படும். வலிமையான காற்று, பூமியின் காந்த மண்டலத்தில் பூமி காந்த புயல் ஏற்பட வாய்ப்புள்ளதாக நிபுணர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.