Categories
உலக செய்திகள்

இவங்க பாராளுமன்ற கொள்கைகளை மீறுதாங்க…. அவசர சட்டத்தை நிறைவேற்றிய பாகிஸ்தான்…. கோபத்துடன் வெளியேறிய எதிர்க்கட்சியினர்கள்….!!

இந்திய அதிகாரிக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனைக்கு எதிராக மேல்முறையீடு செய்வதற்கு அனுமதியளிப்பது தொடர்பான மசோதா பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இந்திய கப்பற்படையின் முன்னாள் அதிகாரியான குல்பூஷன் ஜாதவ் கடந்த 2016 ஆம் ஆண்டில் உளவு பார்த்ததாக கூறி பாகிஸ்தான் ராணுவத்தினர் இவரை கைது செய்தனர். இதனையடுத்து இவருக்கு கடந்த 2017ஆம் ஆண்டு பாகிஸ்தான் ராணுவ நீதிமன்றம் மரண தண்டனை அளிப்பதற்கு உத்தரவிட்டது. இந்த உத்தரவிற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக இந்தியா, பாகிஸ்தானிலிருக்கும் சர்வதேச நீதிமன்றத்தில் மனுவை தாக்கல் செய்தது.

இதன்படி ஜாதாவிற்கு விதிக்கப்பட்ட மரணதண்டனையை மறுபரிசீலனை செய்வதற்கு சர்வதேச நீதிமன்றம் கடந்த 2019 ஆம் ஆண்டு உத்தரவிட்டது. இந்நிலையில் இந்திய கப்பற்படையின் முன்னாள் அதிகாரி தனக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக மேல்முறையீடு செய்வதற்கு அனுமதியளிக்கும் விதமாக பாகிஸ்தான் அரசு அவசர சட்டம் ஒன்றை நிறைவேற்றியது.

இந்த அவசர சட்டத்திற்கு எதிர்க்கட்சியினர்கள் எதிர்ப்பு தெரிவித்தும் கூட இதுதொடர்பான மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இதனால் எதிர்க்கட்சியினர்கள் பாராளுமன்ற கொள்கைகளை பாகிஸ்தான் அரசாங்கம் மீறுவதாக கூறிவிட்டு அங்கிருந்து வெளியேறியுள்ளார்கள்.

Categories

Tech |