Categories
தேசிய செய்திகள்

ரூ50…. என்னங்கடா அநியாயம்…. ரூ10க்கு மேல் விற்க கூடாது…. மத்திய அரசு…!!

முகக்கவசங்களை ரூபாய் பத்துக்கு மேல் இருக்கக்கூடாது என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸின் தாக்கம் இந்தியாவிலும் அதிகரித்து வரும் சூழ்நிலையில், அதனுடைய பதற்றம் தற்போது இந்திய மக்களிடையே பெரும் அளவில் பரவி கிடக்கிறது. ஆகையால் மக்கள் முக கவசம் சனிடைசர் உள்ளிட்டவற்றை அதிகமாக பயன்படுத்த தொடங்கி விட்டார்கள். இந்நிலையில் இதன் மூலம் லாபம் ஈட்ட முயலும் சிலரோ மருந்து கடைகளில் முக கவசங்களை ரூபாய் 25 லிருந்து 50 வரை விற்று வருகின்றனர்.

இது குறித்து சாதாரண பொதுமக்கள் வெறும் 3 ரூபாய்க்கு விற்கப்பட்ட முகக் கவசம் தற்போது கொள்ளை லாபத்திற்கு விற்கப்படுவதாக புகார் அளித்ததை அடுத்து, மத்திய அரசு தற்போது அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், மக்கள் பயன்படுத்தும் சாதாரண மூன்றடுக்கு முககவசங்களை ரூபாய் பத்துக்கு மேல் விற்பனை செய்யக்கூடாது என அறிவுறுத்தியுள்ளது. மாநில அரசுகளும் இதனை உற்றுநோக்க வேண்டும் எனவும் அதிக விலைக்கு விற்போர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டு உள்ளது.

Categories

Tech |