Categories
தேசிய செய்திகள்

மருத்துவ ஊழியர்களின் பாதுகாப்பு… கண்டறியப்பட்ட புதிய கருவி….!!

கொரோனா நோயாளிகளை எளிதில் கண்டறியும் வகையில் கருவி ஒன்று கண்டறியப்பட்டுள்ளது.

கொரோனாவால் பாதிப்படைந்தவர்களிடமிருந்து மற்றவர்களுக்கு நோய்த்தொற்று மிகவும் எளிதாக பரவிக்கொண்டிருக்கிறது. அதனால் கொரோனா வாழும் பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் அனைவரும் முழு உடல் கவச உடை அணிந்து சிகிச்சை அளிக்கும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றனர்.இவ்வாறு முன்னெச்சரிக்கையாக செயல்பட்டு வந்தாலும் கொரோனா வார்டுகளில் பணியாற்றிய பல்வேறு மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் கொரோனாவிற்கு ஆளாகியிருக்கின்றனர். இதனை கருதி கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களிடம் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்கள் எவரும் சரிங்க தொடர்பில் இருப்பதை தவிர்ப்பதற்காக சென்னை ஐ.ஐ.டி.யில் செயல்பட்டுக் கொண்டிருக்கின்ற உடல் ஆரோக்கியம் தொடர்பான புதிய தொழில்நுட்பங்களை கண்டறியும் மையம், ஆரோக்கியம் தொடர்பாக ஐ.ஐ.டி. நடத்தி வருகின்ற புத்தொழில் ஆராய்ச்சி மையத்துடன் சேர்ந்து செயல்பட்டு வருகின்ற ஹெலிக்சன் நிறுவனம் ஆகியவை புதிதாக ஒரு கருவியை கண்டறிந்துள்ளது.

அந்தக் கருவியை கொரோனா  பாதிப்படைந்தவர்களின் விரல்களில் பொருத்தியுடன், கருவியில் பொருத்தப்பட்டுள்ள ரிமோட் சென்சார் மூலமாக உடல் வெப்பநிலை, ஆக்சிஜன் அளவில், இதயத்துடிப்பு, சுவாசம் போன்ற பல்வேறு முக்கியமான அளவீடுகளை ஒரு அறையில் இருந்தவாறு தொலைபேசி மூலமாகவோ அல்லது மருத்துவமனைகளின் கட்டுப்பாட்டு மையத்தின் மூலமாகவோ துல்லியமாக அறிந்து கொள்ளலாம். இந்த கருவியானது அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் இரண்டாயிரத்துக்கும் மேலானவர்களுக்கு மற்றும்  வீடுகளில் இருந்தே சிகிச்சை பெற்று வரும் 5 ஆயிரத்துக்கும் மேலானவர்களுக்கு பொருத்தப்பட்டிருக்கிறது.

ஒரு நோயாளிக்கு பொருத்திய கருவியினை மற்றொரு நோயாளிக்கும் தாராளமாக பொருத்திக் கொள்ளலாம். மேலும் புதிய கருவியை ஓராண்டு வரையில் பயன்படுத்த முடியும்.இதனைப் போலவே தெற்கு ரயில்வேயின், சிக்னல் மற்றும் தொலைத்தொடர்புத் துறையின் சார்பில் கொரோனா நோயாளிகளை தொடாமல் அவர்கள் அனைவருக்கும் தேவையான மருந்துகள், உணவு தண்ணீர் வழங்குவதற்கு ‘ரயில் மித்ரா’ என்ற ரோபோ ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த ரோபோ நோயாளிகளை நெருங்காமலே அவர்களுக்கு காய்ச்சல் உள்ளதா? என்பதை துல்லியமாக அறிந்து கொள்ளும் தன்மையைக் கொண்டுள்ளது.அதே சமயத்தில் இந்த ரோபோவில் வைக்கப்பட்டுள்ள கேமரா மூலமாக கொரோனா நோயாளிகளுடன் பேச இயலும். கொரோனா நோயாளிகள் உபயோகித்த தண்ணீர் பாட்டில்கள் மற்றும் முக கவசங்களை எடுத்துச்சென்று அப்புறப்படுத்தும் வசதியையும் கொண்டுள்ளது.

Categories

Tech |