காங்கிரஸ் கட்சியில் இடைக்கால தலைவர் திருமதி சோனியா காந்தி மருத்துவ பரிசோதனைகளுக்காக வெளிநாட்டு பயணம் மேற்கொண்டுள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் இடைக்காலத் தலைவர் திருமதி சோனியா காந்தி வழக்கம்போல மேற்கொள்ளும் மருத்துவ பரிசோதனைகளுக்காக வெளிநாட்டிற்கு பயணம் மேற்கொண்டுள்ளார். அவர் வெளிநாட்டில் இரண்டு வாரங்கள் தங்கி மருத்துவ பரிசோதனைகளை முடித்து கொண்டு பின்னர் இந்தியாவுக்கு திரும்புகிறார்.
அதன் பின்னர் நடைபெற உள்ள நாடாளுமன்ற கூட்டத்தொடரில் கலந்து கொள்வார். திருமதி சோனியா காந்தியின் வெளிநாட்டுப் பயணத்தில் அவருடன் அவரது மகனும், நாடாளுமன்ற எம்பியுமான திரு ராகுல் காந்தி சென்றுள்ளார். அவரும் நாடு திரும்பிய பின்னர் நாடாளுமன்ற கூட்டத் தொடரில் கலந்து கொள்வார் என காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.