சென்னை மாவட்டத்தில் ஜமாலியா பகுதியில் இயங்கி வரும் மண்டல நிர்வாக மருத்துவ அலுவலகத்தின் வேலை தங்களுக்கு கீழ் செயல்பட்டு வரும் 35 மருந்தகங்களுக்கு தேவையான உபகரணங்கள் மற்றும் மருத்துவப் பொருட்கள் வழங்குவதே ஆகும். இந்த நிலையில் ஊழல் தடுப்பு பிரிவு போலீசார் நேற்று மதியம் மருத்துவ மண்டல அதிகாரி டாக்டர் திருநாவுக்கரசு அலுவலக அறையில் சோதனை மேற்கொண்டுள்ளனர். இந்த சோதனையில் கணக்கில் வராத ரூபாய் ஆறு லட்சம் பணமும் 28 தங்க காசுகளும் சிக்கி உள்ளது. இதனை போலீசார் பறிமுதல் செய்ததோடு டாக்டர் திருநாவுக்கரசிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதேபோல் பூந்தமல்லி சார் பதிவாளர் அலுவலக த்தில் பணிபுரியும் அதிகாரிகள் பவர் பத்திரம் பதிவு செய்வதற்கு ரூபாய் 30,000 லஞ்சம் கேட்டுள்ளனர். இதனால் லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் நேற்று காலை சார் பதிவாளர் அலுவலகத்திற்கு சென்று சோதனை மேற்கொண்டதில் கணக்கில் வராத பணம் ரூபாய் 30 ஆயிரத்தை பறிமுதல் செய்துள்ளனர். இது தொடர்பாக சார்பதிவாளர் அலுவலகத்தில் உள்ள ஊழியர்களிடம் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.