Categories
தேசிய செய்திகள்

மருந்து ஆலையில் திடீர் தீ விபத்து…. காரணம் என்ன?…. நொடியில் பறிபோன 4 உயிர்…. பெரும் சோகம்….!!!!!

ஆந்திரப்பிரதேசம் அனகாபல்லி மாவட்டத்திலுள்ள ஜவஹர்லால் நேரு பார்மா சிட்டிக்குள் தனியாருக்கு சொந்தமான மருந்து ஆலை செயல்பட்டு வருகிறது. இந்த ஆலையின் யூனிட் 3ல் கடந்த 26 ஆம் தேதி தொழிலாளர்கள் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டனர். அப்போது ஆலையில் திடீரென்று தீ விபத்து ஏற்பட்டதை அடுத்து தீயணைப்புத்துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்புத்துறை அலுவலர்கள் பல மணிநேரம் போராடி தீயை அணைத்தனர். எனினும் இந்த தீ விபத்தில் 4 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். இதற்கிடையில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில், தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த விபத்து தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதுபற்றி காவல்துறையினர் கூறியிருப்பதாவது “நள்ளிரவில் தீவிபத்து ஏற்பட்டுள்ளது. இவ்விபத்தில் இறந்தவர்கள் ராஜேஷ் பாபு, ராம் கிருஷ்ணா, ராம்பாபு மற்றும் வெங்கட ராவ் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். அதாவது, கெமிக்கல் கசிவு காரணமாக விபத்து ஏற்பட்டிருக்கிறது” என அவர்கள் கூறினர்.

Categories

Tech |