Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

இந்த காரணத்தினால் தான் நிறுத்தி வைத்திருந்தோம்… திரும்பவும் ஆரம்பிச்சாச்சு… அலை மோதி வரும் வியாபாரிகள்…!!

கொரோனா பரவல் காரணத்தால் மூடப்பட்டிருந்த சந்தைகள் தற்போது திறக்கப்பட்டு விற்பனை நடைபெற்று வருகிறது.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் வாரத்தில் செவ்வாய் கிழமை மட்டும் சந்தை நடைபெற்று வருவது வழக்கமாக இருக்கிறது. இந்நிலையில் இதில் விவசாய விளைபொருட்கள், உபகரணங்கள் விற்பனை, ஆடு மற்றும் மாடு வாங்குவதற்காக சுற்றியுள்ள பொதுமக்கள் வாகனங்களில் வருவது வழக்கமாக இருக்கிறது. இதனால் சந்தை பகுதி அன்று மட்டும் பரபரப்பாக காணப்படும். இதனையடுத்து தற்போது கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக கடந்த ஏப்ரல் மாதம் வரை இப்பகுதியில் விற்பனைகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

அதனால் இந்த சந்தை பகுதி வெறிச்சோடி காணப்பட்டதுள்ளது. இதனை தொடர்ந்து போன செவ்வாய்க்கிழமை முதல் சந்தை வழக்கம் போல் நடைபெற்று வருகிறது. இதில் ஆடு மற்றும் மாடுகளின் விலை அதிகரித்துள்ளது. மேலும் பொதுமக்கள் மற்றும் கடைக்காரர்கள் ஆடுகளை வாகனங்களில் வாங்கி வியாபாரிகள் சென்றுள்ளனர். இதில் வெளி மாவட்டங்களில் வசிக்கும் மொத்த கொள்முதல் வியாபாரிகள் யாரும் வராத காரணத்தினால் வியாபாரம் சரியாக நடைபெறவில்லை என விவசாயி ஒருவர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |