Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

மரத்தில் கிடந்த சடலம்…. விசாரணையில் தெரியவந்த உண்மை…. காஞ்சிபுரத்தில் பரபரப்பு….!!

வாலிபர் ஒருவர் மரத்தில் சடலமாகக் கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள புனல்வாசல் பகுதியில் ஜான்பீட்டர் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது நண்பர்களுடன் காஞ்சிபுரம் மாவட்டத்தில் இருக்கும் ஸ்ரீபெரும்புதூர் பாரதி நகர் பகுதியில் வாடகை வீட்டில் தங்கி மண்ணுர் பகுதியில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் ஒப்பந்த அடிப்படையில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் ஜான்பீட்டருடன் தங்கியிருந்த நண்பர்கள் பாலா மற்றும் சீனிவாசன் உணவு வாங்கி வர பஜார் பகுதிக்கு சென்றுள்ளனர்.

பின்னர் அவர்கள் திரும்பி வந்து பார்த்த போது ஜான்பீட்டர் காணவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த நண்பர்கள் பல பகுதிகளில் தேடிப் பார்த்தும் அவர் கிடைக்கவில்லை. இதனை அடுத்து வாலிபர் ஒருவர் மரத்தில் சடலமாக தொங்குவதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் விசாரணை நடத்தி உள்ளனர்.

அந்த விசாரணையில் இறந்து கிடந்தது ஜான்பீட்டர் என்பது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. பின்னர் காவல்துறையினர் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் ஜான்பீட்டர் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |