மான்ட்கார்லோ மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டியில் ,3வது சுற்றில் நோவக் ஜோகோவிச் தோல்வியை சந்தித்தார் .
மொனாக்கோவில் மான்ட்கார்லோ மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடந்த ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவில் ,3வது சுற்று போட்டியில் செர்பியா நாட்டை சேர்ந்த நம்பர் 1 வீரரான நோவக் ஜோகோவிச் மற்றும் இங்கிலாந்தை சேர்ந்த டேனியல் இவான்சி ஆகியோர் மோதிக்கொண்டனர். இதில் ஜோகோவிச் 4-6, 5-7 என்ற என்ற நேர் செட் கணக்கில், 33வது இடத்திலுள்ள டேனியல் இவான்சிடம் தோல்வியடைந்தார் .
இதனால் கடந்த 10 வருடங்களாக வெற்றியை தன்வசப்படுத்திய நோவக் ஜோகோவிச்க்கு , நேற்றைய போட்டியில் தோல்வியடைந்து அதிர்ச்சியை ஏற்படுத்தியது.அடுத்து நடந்த மற்றொரு ஆட்டத்தில் ,6வது இடத்திலிருந்த ஜெர்மனி நாட்டை சேர்ந்த அலெக்சாண்டர் ஸ்வெரேவ் ,15-வது இடத்திலிருந்த பெல்ஜியம் நாட்டு வீரரான, டேவிட் கோபினிடம் 4-6, 6-7 (7-9) என்ற நேர்செட் கணக்கில் தோல்வியடைந்தார். மற்றொரு போட்டியில் ஸ்பெயின் வீரர் ரபெல் நடால் டிமிட்ரோவை ,6-1, 6-1 என்ற நேர்செட்டில் தோற்கடித்தார் .