துளசி மற்றும் மஞ்சள் இரண்டின் அற்புத நன்மைகள்:
1. துளசி மற்றும் மஞ்சளை ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி கொதிக்க வையுங்கள். பல நோய் பிரச்னைகளுக்கு இதை தினமும் குடித்து வாருங்கள். சளியினால் ஏற்படும் பாதிப்பை தவிர்த்திட இதை குடியுங்கள் நல்ல நிவாரனம் கிடைக்கும்.
2. துளசி நீரில் மஞ்சள் கலந்து தினமும் பருகி வந்தால் ஆஸ்துமா பிரச்னை தீரும், நன்கு சுவாசிக்க முடியும். ஆஸ்துமா பிரச்சனையில் இருந்து விடுபட்டுவிடலாம்.
3. துளசி நீரில் மஞ்சள் கலந்து அதிகாலையில் எழுந்ததும் குடித்து வந்தால், கெட்ட கொழுப்பு செல்கள் கரைத்து, கொலஸ்ட்ரால் பிரச்சனைகளை குறைத்து விடும்.
4. துளசி, மஞ்சள் கலந்த நீரை தினமும் காலையில் குடிப்பதால், நரம்புகள் பலம் பெரும். மூளையின் ரத்த ஓட்டத்தை அதிகரிக்கும். மன அழுத்தம் தொடர்பான பிரச்சனைகளையும் தடுத்து விடும்.
5. துளசி மற்றும் மஞ்சள் கலந்த பானத்தை குடிப்பதால், குடலியக்கத்தை மேம்படுத்துகிறது. இதனால் அடிக்கடி ஏற்படும் மலச்சிக்கல் அவஸ்தையிலிருந்து விடுபட வைக்கிறது.
6. துளசி நீரில் மஞ்சள் கலந்து குடிப்பதால், நோயெதிர்ப்பு அழற்சி தன்மை, வயிற்றில் உள்ள அமிலத்தின் தீவிரத்தைக் குறைத்து, அசிடிட்டி போன்ற பிரச்சனைகள் வராமல் தடுக்கிறது.
7. இயற்கை இந்த துளசி பானத்தை தினமு குடிப்பதால், வாய் மற்றும் வயிற்றில் ஏற்படும் புண்களை குறைத்து, அல்சர் பிரச்சனையில் இருந்து தடுக்கிறது. மேலும் செரிமான பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம்.
8. தினமும் காலையில் மஞ்சள் கலந்த துளசி தண்ணீரைக் குடிப்பதன் மூலம், சைனஸ் மற்றும் மன அழுத்தத்தால் ஏற்படும் தலைவலி தடுக்கிறது.