Categories
சென்னை மாநில செய்திகள்

மாண்டஸ் புயல் எதிரொலி!…. சென்னையில் 6 விமான சேவைகள் ரத்து….. வெளியான அறிவிப்பு….!!!!

வங்க கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற்றுள்ள நிலையில், நாளை புதுச்சேரி, ஸ்ரீஹரிகோட்டா இடையே மாமல்லபுரம் அருகே கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன் பிறகு சென்னையிலிருந்து தற்போது 520 கிலோமீட்டர் தொலைவில் மாண்டஸ் புயல் நிலை கொண்டுள்ளது.

இந்த புயலானது இன்று மாலை 12 கிலோமீட்டர் வேகத்தில் நகர்ந்து வலுப்பெரும் என்று கணிக்கப் பட்டுள்ளது. இந்நிலையில் இந்த புயலின் காரணமாக பல இடங்களில் கன மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதையடுத்து, சென்னையில் 6 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. ‌அதன்படி சென்னை-தூத்துக்குடி, சென்னை-சீரடி, சென்னை-மங்களூர் இடையே விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.

Categories

Tech |