Categories
கரூர் மாவட்ட செய்திகள்

மருத்துவக்கல்லூரியில் இடம் வாங்கி தருவதாக கூறி…. மாணவியிடம் மோசடி செய்த நபர்…. போலீஸ் அதிரடி நடவடிக்கை….!!

மருத்துவ கல்லூரியில் இடம் வாங்கி தருவதாக கூறி மாணவியின் கல்வி சான்றிதழ்களை வாங்கி விட்டு மோசடி செய்தவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

கரூர் மாவட்டத்தில் உள்ள நரிகட்டியூர் பகுதியில் உள்ள தமிழ்நாடு அரசு வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் பேபிசித்ரா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ரசிகா என்ற மகள் உள்ளார். இவர் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு முடித்து நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளார். இதற்கிடையே கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள தியாகதுருகம் மற்றும் மதுரையில் கெசிட் எஜூகேஷன் டிரஸ்ட் என்ற பெயரில் கல்வி நிறுவனத்தை நடத்தி வரும் ரகுநாத பாண்டியன் என்பவரின் அலுவலகத்தில் இருந்த காயத்ரி என்ற பெண் பேபிசித்ராவின் செல்போனை தொடர்பு கொண்டு பேசியுள்ளார்.

அப்போது ரசிகாவை மருத்துவப் படிப்பில் சேர்க்குமாறு கூறியுள்ளார். மேலும் வங்கதேசத்தில் உள்ள ஒரு மருத்துவ கல்லூரியில் ரசிகாவை மருத்துவ படிப்பில் சேர்ப்பது குறித்து அங்கீகார கடிதத்தையும் அனுப்பி வைப்பதாக கூறியுள்ளார். அதன்பின் ரகுநாத பாண்டியன் என்பவரின் மின்னஞ்சல் மூலம் அதற்கான கடிதத்தை அனுப்பியுள்ளார். இந்நிலையில் டிரஸ்டில் இருந்து ரகுநாத பாண்டியன் பேபி சித்ராவை தொடர்பு கொண்டு ரசிகாவின் சான்றிதழ்கள், பாஸ்போர்ட், ரூ.7 ஆயிரம் ஆகியவற்றைப் பெற்றுக் கொண்டுள்ளார். இதனையடுத்து ரகுநாத பாண்டியன் வங்கி கணக்கிற்கு பேபி சித்ராவின் கணவர் ரூ.4 லட்சத்து 70 ஆயிரம் செலுத்தியுள்ளார். அதன்பின் ரகுநாத பாண்டியனை தொடர்புகொண்டபோது அவர் எந்தவித பதிலையும் அளிக்கவில்லை.

இதனையடுத்து ஏமாற்றப்பட்டதை அறிந்த பேபி சித்ரா கரூர் மாவட்ட குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி ரகுநாத பாண்டியனை கைது செய்துள்ளனர். இந்நிலையில் காவல்துறையினர் ரகுநாத பாண்டியனிடம் விசாரணை நடத்தி அவரது வீட்டிலிருந்த பேபிசித்ரா மகளின் அசல் கல்வி சான்றிதழ், பாஸ்போர்ட் ஆகியவற்றை கைப்பற்றி மீண்டும் ரகுநாத பாண்டியனை நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர். அதன்பின் ரகுநாத பாண்டியனை மீண்டும் சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில் விசாரணை நடத்தி ரசிகாவின் கல்வி சான்றிதழ்களை கைப்பற்றிய உரிய போலீஸ் சூப்பிரண்டு தலைமையிலான காவல்துறையினரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவதனம் பாராட்டியுள்ளார்.

Categories

Tech |