மன உளைச்சலில் மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மாவட்டத்திலுள்ள விருகம்பாக்கத்தில் பவானி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஓரிக்கை பேராசிரியர் நகரில் இருக்கும் தனது சித்தி வீட்டில் தங்கி அரசு பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்திருக்கிறார். இந்நிலையில் பவானி அடிக்கடி தொலைபேசியில் பேசிக் கொண்டிருந்ததால் வீட்டில் இருந்தவர்கள் அவரிடம் படிக்காமல் அடிக்கடி செல்போனில் பேசிக்கொண்டே இருக்கிறாயே என்று கேட்டுள்ளனர்.
இதனால் மன உளைச்சலில் இருந்த பவானி வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இது பற்றி தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பவானியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.