Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

மனைவி திட்டியதற்கு… கணவன் எடுத்த விபரீத முடிவு… சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்…!!

மன வேதனையில் தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள லெவிஞ்சிபுரம் பகுதியில் நெல்லையப்பன் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றில் வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த சில வருடங்களாகவே நெல்லையப்பனுக்கு மது குடிக்கும் பழக்கம் இருப்பதால் அவர் வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே  இருந்துள்ளார். இதனால் நெல்லையப்பனின் மனைவி இவ்வாறு வேலைக்கு செல்லாமல் இருந்தால் எப்படி குடும்பத்தை நடத்துவது என்று அவரைத் திட்டியுள்ளார். இதனால் நெல்லையப்பன் மிகுந்த மனவேதனையுடன் இருந்துள்ளார்.

இந்நிலையில் நெல்லையப்பன் வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனையடுத்து வெளியே சென்றுவிட்டு வீட்டிற்கு திரும்பிய நெல்லையப்பனின் மனைவி தனது கணவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதை பார்த்து அதிர்ச்சி அடைந்து அலறி சத்தம் போட்டுள்ளார். அந்த அலறல் சத்தத்தை கேட்டு அருகில் இருந்தவர்கள் விரைந்து சென்று பார்த்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். அந்தத் தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் நெல்லையப்பனின் உடலைக் கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |