மன உளைச்சலால் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள தண்டுகாரன் தெருவில் ஜெமினி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கூலித் தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த சில தினங்களாக மன உளைச்சலில் இருந்துள்ளார். இதனையடுத்து வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் ஜெமினி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
பின்னர் ஆபத்தான நிலையில் ஜெமினியை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர் ஜெமினி ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.