மன உளைச்சலால் தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள பு.கொணலவாடி பகுதியில் தவமணி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கூலி வேலைப் பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் தவமணி தனது வீட்டில் திடீரென விஷம் குடித்து விட்டு மயங்கிக் கிடந்துள்ளார். இதைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி தவமணி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதனையடுத்து உடல் நலம் பாதிக்கப்பட்டு கடந்த மூன்று வருடங்களுக்கும் மேலாக வீட்டில் இருந்து வந்ததால் மன உளைச்சல் ஏற்பட்டு அவர் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.