Categories
தேசிய செய்திகள்

“187 நாணயங்களை விழுங்கிய நபர்”…. அறுவை சிகிச்சை மூலம் அகற்றம்…. அதிர்ச்சியில் மருத்துவர்கள்….!!!!!

கர்நாடக மாநிலத்தில் உள்ள பாகல்கோட் பகுதியில் ஹனகல் ஸ்ரீ குமரேஸ்வரர் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையம் அமைந்துள்ளது. இந்த மருத்துவமனையில் மனநலம் பாதிக்கப்பட்ட ஒருவர் வயிற்று வலி மற்றும் வாந்தி போன்ற பிரச்சனைகளின் காரணமாக சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இவரை மருத்துவர்கள் பரிசோதனை செய்ததில் அளவுக்கு அதிகமாக நாணயங்களை விழுங்கியது தெரியவந்தது. இந்நிலையில் மனநலம் பாதிக்கப்பட்ட நபருக்கு மருத்துவர்கள் அறுவை சிகிச்சை மூலம் வயிற்றில் இருந்த நாணயங்களை நீக்கியுள்ளனர். மேலும் அந்த நபரின் வயிற்றில் 187 நாணயங்கள் இருந்துள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |