Categories
சென்னை மாவட்ட செய்திகள்

மனைவி, மகளை கத்தியால் குத்திய…. கூலி தொழிலாளியின் வெறிச்செயல்…. சென்னையில் பரபரப்பு….!!

குடிபோதையில் தனது மனைவி மற்றும் மகளை கூலித்தொழிலாளி கத்தியால் குத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை மாவட்டத்திலுள்ள அசோக் நகரில் விஜயகுமார் என்ற கூலித்தொழிலாளி வசித்து வருகிறார். இவருக்கு செந்தில்குமாரி என்ற மனைவி உள்ளார். இவர் சென்னை மெட்ரோ ரயில் நிலையத்தில் ஒப்பந்த அடிப்படையில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு மோனிஷா என்ற மகள் இருக்கிறார். இந்நிலையில் குடிப்பழக்கத்திற்கு அடிமையான விஜயகுமார் தினமும் மது குடித்துவிட்டு தனது மனைவி மற்றும் மகளுடன் தகராறு செய்துள்ளார்.

அப்போது திடீரென கோபமடைந்த விஜயகுமார் தனது வீட்டில் இருந்த கத்தியை எடுத்து செந்தில்குமாரி குத்திய போது, அதனை தடுக்க முயற்சித்த மகள் மோனிஷாவையும் செந்தில்குமார் கத்தியால் குத்தி விட்டார். இதனையடுத்து அக்கம்பக்கத்தினர் இருவரையும் மீட்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றுள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த சேலையூர் காவல் துறையினர் வழக்குப் பதிந்து தலைமறைவான விஜயகுமாரை தீவிரமாக தேடி வருகின்றனர்.

Categories

Tech |