Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

எனக்கு இப்போவே வேணும்…. தீக்குளித்த கோழிக்கடை உரிமையாளர்…. கோவையில் பரபரப்பு…!!

நடுரோட்டில் கோழி கடை உரிமையாளர் தீக்குளித்து தற்கொலை செய்ய முயற்சித்த  சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள செட்டிபாளையம் பகுதியில் விஜயகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு காளீஸ்வரி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு இரண்டு பெண் குழந்தைகள் இருக்கின்றனர். விஜயகுமார் 3 கறி கோழி கடை நடத்துவதோடு, தண்ணீர் கேன் சப்ளை செய்து வந்துள்ளார். இந்நிலையில் விஜயகுமார் தாமரைக் குளம் பகுதியில் வசிக்கும் ஒருவரிடம் 20 ஆயிரம் ரூபாய் கடன் வாங்கி அதில் பத்தாயிரம் ரூபாயை திருப்பிக் கொடுத்துவிட்டார்.

இதனை அடுத்து விஜயகுமார் ஆட்டோவில் தண்ணீர் சப்ளை செய்து கொண்டிருக்கும்போது, வந்த கடன் கொடுத்தவர் மீதி பணத்தை உடனடியாக தருமாறு வற்புறுத்தியுள்ளார். அதற்கு விஜயகுமார் பணத்தை நாளை தருகிறேன் என்று கூறியும் கடன் கொடுத்தவர் அதனை ஏற்றுக்கொள்ளாமல் விஜயகுமாரை தகாத வார்த்தைகளால் திட்டி தள்ளி விட்டுள்ளார். இதனால் விஜயகுமார் திடீரென தனது ஆட்டோவில் இருந்த பெட்ரோலை உடல் முழுவதும் ஊற்றிக்கொண்டு தீக்குளித்து தற்கொலை செய்ய முடிவு செய்துள்ளார்.

இதனை பார்த்ததும் கடன் கொடுத்தவர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். அதன்பின் விஜயகுமார் மீது எரிந்த தீயை அணைத்து அவரை பொதுமக்கள் மீட்டு பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர். அதன் பின்னர் மேல்சிகிச்சைக்காக கோயம்புத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட விஜயகுமாருக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த கிணத்துக்கடவு காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |