குடும்பம் நடத்த வர மறுத்த தால் கணவன் மனைவியை கத்தியால் குத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மாவட்டத்திலுள்ள நெற்குன்றம் பகுதியில் ரவிச்சந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் பழ வியாபாரம் செய்து வருகிறார். இவருக்கு கலைச்செல்வி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் கணவன் மனைவிக்கிடையே குடும்ப பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் கோபத்தில் கலைச்செல்வி கடந்த மாதம் கணவரை விட்டு பிரிந்து தாய் வீட்டிற்கு சென்றுள்ளார். இந்நிலையில் தன்னுடன் குடும்பம் நடத்த வருமாறு ரவிச்சந்திரன் கலைச்செல்வியை அழைத்துள்ளார்.
ஆனால் அதற்கு அவர் மறுப்பு தெரிவித்ததால் கோபமடைந்த ரவிச்சந்திரன் தாலியை கழற்றி தருமாறு கேட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து கணவன் மனைவி இருவருக்கும் தகராறு முற்றிய போது கோபம் அடைந்த ரவிச்சந்திரன் அங்கிருந்த கத்தியை எடுத்து கலைச்செல்வியை குத்திவிட்டு தப்பி ஓடிவிட்டார். இது குறித்து சேலையூர் காவல் நிலையத்தில் காயமடைந்த கலைச்செல்வி புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.