புதுமாப்பிள்ளை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி மாவட்டத்தில் உள்ள காட்டூர் பகுதியில் பழனிசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சதீஷ் என்ற மகன் இருந்துள்ளார். இவருக்கு கோயம்புத்தூர் மாவட்டத்தில் வசிக்கும் ஹேமா என்ற பெண்ணுடன் முகநூலில் பழக்கம் ஏற்பட்டு அது காதலாக மாறிவிட்டது. கடந்த 15 நாட்களுக்கு முன்பு சதீஷும், ஹேமாவும் திருமணம் செய்து கொண்டனர். இந்நிலையில் சதீஷ் மது குடிப்பதற்காக பணம் கேட்டு ஹேமாவை தொந்தரவு செய்துள்ளார்.
அப்போது பணம் கொடுப்பதற்கு ஹேமா மறுப்பு தெரிவித்ததால் மன உளைச்சலில் இருந்த சதீஷ் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சதீஷின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.