Categories
மதுரை மாவட்ட செய்திகள்

பல வருடம் கழித்து வழக்கு…. முதல் மனைவியின் நிபந்தனை…. மாநகராட்சி பணியாளர் எடுத்த விபரீத முடிவு…!!

முதல் மனைவி ஜீவனாம்சம் கேட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததால் மாநகராட்சி பணியாளர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மாவட்டத்திலுள்ள மீனாம்பாள்புரம் பகுதியில் முத்து கிருஷ்ணன் என்ற மாநகராட்சி பணியாளர் வசித்து வந்துள்ளார். இவருக்கும், இவரது முதல் மனைவிக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரிடமிருந்து விவாகரத்துப் பெற்று இரண்டாவதாக ஒருவரை திருமணம் செய்துள்ளார். இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளாக இவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், இவரது முதல் மனைவி ஜீவனாம்சம் கேட்டு பல ஆண்டுகள் கழித்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

இதனால் மன உளைச்சலில் இருந்த முத்துகிருஷ்ணன் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலீசார் அங்கு விரைந்து சென்று அவரின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இது குறித்து வேலூர் போலீசார் வழக்குப் பதிந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |