டிரைவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள செண்பகராமன்புதூர் கீழத்தெருவில் மூர்த்தி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கார் டிரைவராக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு மகாலட்சுமி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு 4 மகள்களும் ஒரு மகனும் உள்ளனர். இந்நிலையில் மூர்த்தி மது குடித்து விட்டு வீட்டிற்கு வந்து தனது மனைவி மகாலட்சுமியுடன் தகராறு செய்ததால் லட்சுமி அவரை கண்டித்துள்ளார். இதனால் மன உளைச்சலில் இருந்து மூர்த்தி தனது வீட்டில் இருந்த விஷத்தை எடுத்து குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
இதனை அடுத்து மயங்கிய நிலையில் இருந்த மூர்த்தியை அவரது மனைவி மற்றும் அருகில் உள்ளவர்கள் மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அதன் பின் மேல் சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மூர்த்திக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனளிக்காமல் அவர் பரிதாபமாக உயிரிழந்து விட்டார். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த ஆரல்வாய்மொழி போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.