வாலிபர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தர்மபுரி மாவட்டத்தில் உள்ள காரிமங்கலம் பகுதியில் ராமலிங்கம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு நாகமணி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையான ராமலிங்கம் தனது மனைவியிடம் அடிக்கடி பணம் கேட்டு தகராறு செய்துள்ளார். ஆனால் மது குடிப்பதற்கு நாகமணி பணம் கொடுக்காததால் மன உளைச்சலில் இருந்த ராமலிங்கம் தனது வீட்டில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
இதனையடுத்து மயங்கிய நிலையில் கிடந்த அவரை அருகில் உள்ளவர்கள் மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி ராமலிங்கம் பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.