Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

நிலைதடுமாறிய மோட்டார் சைக்கிள்…. கோர விபத்தில் பறிபோன உயிர்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்த விபத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலக உதவியாளர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள மகிழ்ச்சிபுரம் பகுதியில் சதீஷ் கண்ணன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் உதவியாளராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் சதீஷ் கண்ணன் தனது மோட்டார் சைக்கிளில் கோரம்பள்ளம் அருகில் சென்று கொண்டிருந்த போது நிலைதடுமாறி கீழே விழுந்து படுகாயமடைந்தார்.

இதனை பார்த்த பொதுமக்கள் உடனடியாக சதீஷ் கண்ணனை மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி சதீஷ் கண்ணன் பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |