Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

இடிந்து விழுந்த மண் சுவர்… தந்தையாகும் சமயத்தில் நேர்ந்த சோகம்… துயரத்தில் ஆழ்ந்த குடும்பம்…!!

குடிசை வீட்டின் மண் சுவர் இடிந்து விழுந்து மேள கலைஞர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள எம்.ஜி.ஆர் நகரில் சண்முகம் என்ற மேள கலைஞர் வசித்து வருகிறார்.  இவருக்கு சில மாதங்களுக்கு முன் திருமணம்முடிந்தது. இவரது மனைவி தற் போது கர்ப்பிணியாக உள்ளார். மேலும் சண்முகராஜனின் தந்தை கோவிலுக்கு யாத்திரை சென்று விட்டார். இந்நிலையில் சண்முகராஜ் அவரது மனைவி மற்றும் மைத்துனர் மூர்த்தி ஆகிய மூவரும் குடிசை வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தனர். அப்போது பெய்த கன மழையால் வீட்டின் சுவர் திடீரென இடிந்து விழுந்துவிட்டது. இதனையடுத்து தூங்கிக்கொண்டிருந்த சண்முகராஜ் மற்றும் அவரது மைத்துனர் மூர்த்தி ஆகியோர் அந்த இடிபாடுகளில் சிக்கிக்கொண்டனர்.

அதன் பின் அவர்களின் சத்தம் கேட்டு அருகில் குடியிருந்தவர்கள் விரைந்து வந்து இருவரையும் மீட்டனர். ஆனால் சண்முகராஜ் சம்பவ இடத்திலேயே இறந்து விட்டார். அதன்பின் மூர்த்தியை மீட்டு சிகிச்சைக்காக ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மேலும் சண்முகராஜன் மனைவி சற்று தூரத்தில் படுத்திருந்ததால் அவர் உயிர் தப்பினார். இதனைதொடர்ந்து தகவல் அறிந்த போலீசார் மற்றும் வருவாய்த் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |