Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

அங்கிருந்து கொண்டு வரியா… வசமாக சிக்கிய வாலிபர்… கைது செய்த காவல்துறையினர்…!!

கர்நாடக மாநிலத்திலிருந்து 187 மது பாட்டில்களை கடத்தி வந்த ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். 

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள காரியமங்கலம் காவல்துறையினர் அப்பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது கிருஷ்ணகிரியில் இருந்து தர்மபுரி நோக்கி வந்த மோட்டார் சைக்கிளை சந்தேகத்தின் பேரில் நிறுத்தி சோதனை செய்துள்ளனர். அந்த சோதனையில் மோட்டார் சைக்கிளில் மதுபாட்டில்கள் கடத்தி சென்றது தெரியவந்துள்ளது. இதனை அடுத்து மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்தவரிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தியுள்ளனர்.

அந்த விசாரணையில் அவர் தர்மபுரி மாவட்டத்திலுள்ள முகநூல் கிராமத்தில் வசிக்கும் சந்திரசேகர் என்பது தெரியவந்துள்ளது. இவர் கர்நாடக மாநிலத்தில் இருந்து விற்பனைக்காக மதுபாட்டில்களை கடத்தி வந்தது தெரியவந்துள்ளது. இதனையடுத்து அவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் அவரிடமிருந்த 187 மதுபாட்டில்கள் மற்றும் மோட்டார் சைக்கிளை காவல்துறையினர் பறிமுதல் செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |