Categories
உலக செய்திகள்

இரவு நேரத்தில் வீட்டின் கதவை தட்டும் சத்தம்.. கதவை திறந்தவருக்கு நேர்ந்த கொடூரம்..!!

லண்டனில் இரவு நேரத்தில் மர்மநபர் ஒருவர் வீட்டின் கதவைத் தட்டி மூவர் மீது ஆசிட் வீசிய கொடூரச்சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

லண்டனில் உள்ள Colindale என்ற பகுதியில் அமைந்துள்ள அடுக்குமாடி வீட்டில் நேற்று இரவு கதவு தட்டும் சத்தம் கேட்டுள்ளது. எனவே வீட்டின் உரிமையாளர் கதவை திறந்திருக்கிறார். அப்போது ஒரு மர்மநபர் திடீரென்று வீட்டிலிருந்தவர்கள் மீது ஆசிட் வீசிவிட்டு தப்பியுள்ளார். இதில் 10 வயது குழந்தை, 43 வயது நபர் மற்றும் அவரின் 36 வயது மனைவி ஆகியோர் வலி தாங்க முடியாமல் அலறி துடித்தனர்.

எனவே உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பின்பு சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் அவர்களை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். தற்போது அவர்கள் மருத்துவமனையிலிருந்து குணமாகி வீடு திரும்பிவிட்டார்கள் என்றும் அவர்களுக்கு எந்தவித பாதிப்பும் இல்லை என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் அவர்கள் மீது ஆசிட் வீசப்பட்டு இருந்ததால் அவர்களுக்கு உதவச்சென்ற காவல்துறையினர் மீதும் ஆசிட் பட்டது. எனவே அவர்களுக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டது. இது தொடர்பான விசாரணையில் அக்கம்பக்கத்தினர் கூறுகையில், திடீரென்று ஒரு மர்ம நபர் வீட்டின் கதவைத் தட்டி அவர்கள் மீது ஆசிட் வீசிவிட்டு தப்பிச்சென்றதாக கூறியுள்ளனர்.

மேலும் அவர்களின் அலறல் சத்தம் கேட்டு வெளியில் வந்து பார்த்ததாகக் கூறுகிறார்கள். எனவே காவல் துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Categories

Tech |