தமிழ் திரையுலகில் கடந்த 2007-ஆம் ஆண்டு வெளியான கூடல்நகர் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் சீனு ராமசாமி. இதனை தொடர்ந்து இவர் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான தென்மேற்கு பருவக்காற்று திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. இதன்பின் இவர் இயக்கத்தில் வெளியான தர்மதுரை, நீர்ப்பறவை, கண்ணே கலைமானே ஆகிய படங்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. தற்போது இவர் இயக்கத்தில் உருவாகியுள்ள மாமனிதன் படம் ரிலீஸுக்கு தயாராகி வருகிறது.
இந்த நிலையில் விரைவில் வெளிவர இருக்கும் மாமனிதன் திரைப்படம் குறித்து சீனு ராமசாமி பேசுகையில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் மாமனிதன் திரைப்படத்தை பார்த்துவிட்டு நள்ளிரவு 3 மணிக்கு கால் செய்து பாராட்டினார். எனக்கு என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் திகைத்து போனேன். உங்கள் பாராட்டு எனக்கு தெம்பு அளித்துள்ளது என்றேன். மேலும் சூப்பர் ஸ்டார் என்னை பாராட்டிய நினைத்து யாரிடம் தெரிவிப்பது என்று தெரியாமல் தூங்கிக் கொண்டிருந்த என் மனைவியை எழுப்பி ரஜினி என்னை பாராட்டி உள்ளார் என்பதை காண்பித்தேன்.